Thursday 9 November 2017

சக்கரை நோய் கட்டுக்குள் கொண்டு வர...

நீரிழிவு நோய் ஏன் வருகிறது:
நம் உடலில் பாயும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். நம் வயிற்றிலிருக்கும் கணையம் என்ற உறுப்பு தான் ரத்தத்தில் சக்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் இன்சுலினை சுரக்கிறது, இந்த கணையம் சரியாக செயல்படாமல் போவதால் இன்சுலின் சுரப்பு பாதிக்கபடுகிறது.  இன்சுலின் சரியாக சுரக்காமல் போனால்   ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இப்படிப்பட்ட நிலையைத் தான் நீரிழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம்.

ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சக்கரையின் அளவும், நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு இருக்கும் சக்கரையின் அளவும் எடுத்துக்காட்டும் புகைப்படம்:


பாதிப்புகள்:


நீரிழிவு நோயினால் அதிகம் பாதிக்கபடுவது இரத்தக்குழாய்கள் தான். இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதால் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் ஆகிய உறுப்புகள் அதிக அளவு  நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன. 

மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று சரியான ‘‘உணவுக் கட்டுப்பாடு’’ முறையை பின்பற்றுவதன் மூலமும், (ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இந்த உணவு கட்டுப்பாடு முறை மாறும்) நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலமும் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம். சக்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர சில எளிய உணவு பழக்கங்கள் - விளக்கும் காணொளி காட்சிகள்.


சக்கரை நோய் முழுமையாக குணமடைய 

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்