Friday 29 December 2017

பித்தம் போக்கும் கொத்தமல்லி இலை மருத்துவ பயன்கள்

ங்கிலத்தில் Coriander leaves என்று  அழைக்கப்படும் சிறு தாவர குடும்பத்தை சேர்ந்த கொத்தமல்லியை மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மூலிகை தாவரமாக விளங்குகிறது.   கொத்தமல்லியின் விதையை தனியா என்று அழைக்கப்படுகிறது (coriander seeds). கொத்தமல்லி விதையை காயவைத்து அரைத்து பொடியாக்கி தனியா பொடியாகவும் பயன்படுத்தபடுகிறது. சாம்பார், ரசம் இவற்றில் தழையாக பயன்படுத்தப்படும் வாசனை மிகுந்த கீரையாக கொத்தமல்லி தளை விளங்குகிறது. வாசனை பொருளாக சமையலில் சேர்க்கப்படும் கொத்தமல்லி தளை, இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்ட மிக சிறந்த இயற்கை மருந்தாகும். கொத்தமல்லியின்  இலை, தண்டு மற்றும் வேர் மருத்தவ குணம் கொண்டவை ஆகும். கொத்தமல்லி தளையுடன் மிளகு, புளி, உப்பு சேர்த்து அரைத்து துவையலாக உண்ணலாம். பித்தம், வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி தளையில் வைட்டமின் ஏ, பி, பி1, சி, சுண்ணாம்பு சத்து 
மற்றும் இரும்புச் சத்துக்களும் அதிகம் உள்ளது. சுண்ணாம்புச் சத்து எலும்புகளை வலுவாக்குகிறது, இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். 

கொழுப்பை குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக்கும்: 
சிறிதளவு சீரகத்தை கொத்தமல்லி சாற்றில் ஊற வைத்து பிறகு அதை காய வைத்து பொடியாக்கி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வர உடலில் உள்ள கொழுப்பு குறைவதுடன் இரத்த அழுத்தமும் சீராக்கும்.

நீரிழிவு நோய் குணமாக:
நீரிழிவு நோய் குணமாக்க தயாரிக்கப்படும் மருந்துகளில் முக்கியமான உட்பொருளாக கொத்தமல்லி விளங்குகிறது. கொத்தமல்லி தளை சர்க்கரை அளவை கட்டுபடுத்தும் மிக சிறந்த மூலிகையாக விளங்குகிறது.

அஜீரண கோளாறுகள் நீங்கிட:
கொத்தமல்லி தளையை துவையலாக, சட்னியாக உணவில் சேர்த்துகொண்டால் அது பசியை தூண்டுவதுடன் அஜீரண கோளாறுகளையும் குனமாக்குகிறது. உடலில் உள்ள நச்சுக்கழிவுகளை அகற்றும் சிறந்த கிருமி நாசினியாக கொத்தமல்லி விளங்குகிறது. அசுத்த வாயுக்கள் உடலிலிருந்து வெளியேற்றி வாய்வு தொந்தரவுகளிலிருந்து காக்கிறது. சிறுநீரகக் கோளாறு  போக்கும் வல்லமை உடையது.

கொத்தமல்லி சட்னி செய்முறை காணொளி காட்சி 


முகம் பொலிவு பெற:
கொத்தமல்லி தளை முகத்தில் வரும் முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவற்றை குணப்படுத்தி முகம் பொலிவு பெற உதவுகிறது மேலும் தோலில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு, எரிச்சல் உட்பட பல தோல் நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது.    

பார்வை குறைபாடுகள் போக்கும்:  
கொத்தமல்லி தளையை உணவாக தொடர்ந்து பயன்படுத்தி வர பார்வை குறைபாடுகள் நீங்குகிறது.  

வாய்புண்கள் குணமாக:
உடல் சூட்டை குறைக்கும் குளிர்ந்த தன்மையுள்ள கொத்தமல்லி தளையை மைய அரைத்து அதை வாய்புண்களில் பற்று போட்டால் உடல் சூடு காரணமாக ஏற்படும் வாய்புண்கள் குணமாகிறது.  

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினைகள் குணமாக:  
கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து பின்பு காய வைத்து பொட்டியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சினைகள் குணமாகும்.

கொத்தமல்லி  மருத்துவ குணங்கள் விளக்கும் காணொளி காட்சி 

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 21 December 2017

வல்லாரை கீரை மருத்துவ குணங்கள் & சமையல் குறிப்புகள்


ல மருத்துவ குணங்கள் கொண்ட அற்புத மூலிகையாக வல்லாரை கீரை விளங்குகிறது, வல்லமை மிகுந்த கீரை என்பதால் வல்லரை என பெயர் பெற்றிருக்கிறது, பல்லாயிரகணக்கான ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவ முறையில் வல்லாரை கீரை பல நோய்கள் தீர்க்கும் மருத்துவ மூலிகையாக பயன்பட்டு வருவதாக சுஸ்ருத சம்ஹிதா என்னும் பண்டைய மருத்துவ நூல் தெரிவிக்கிறது. வல்லாரை கீரை நினைவாற்றலை அதிகப்படுத்தி நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, இரத்த ஓட்டத்தை அதிகரித்து விரைவாக மூப்படைவதை தடுத்து இளமையோடு வைக்கிறது. வல்லாரை கீரை மனவளர்ச்சிக்கும், மாணவர்களுக்கு ஞாபக திறன் அதிகரிக்கவும் பயன்படுகிறது, வல்லாரை கீரை தோல் நோய்களை விலக்கி, தோலை பாதுகாப்பதுடன், முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. தென் இந்தியாவில் வல்லாரை கீரையை கொண்டு கூட்டு, பொரியல், சூப், தோசை என்று உணவாக பயன்படுத்துகின்றனர். 

சமீப காலத்தில் வல்லாரை கீரை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் இந்த கீரை நரம்பு மண்டலத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டுள்ளதாக இருப்பது தெரிய வந்துள்ளது.  

வல்லாரை மூளையில் உள்ள செல்களை பாதுகாப்பதுடன், நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.

வல்லாரை கீரை மன அழுத்தத்தை குறைப்பதுடன், மனச்சோர்வை அகற்றுகிறது.

தூக்கமின்மை, அல்செய்மர் போன்ற வியாதிகளை குணப்படுத்த மருந்தாக பயன்படுகிறது. 

வல்லாரை இரத்தத்தை சுத்திகரித்து, உயர் ரத்த அழுத்த வியாதியை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

உடலில் ஏற்படும் காயங்களை ஆற்ற வல்லாரையை காயங்களின் மேல் வெளிப்புற மருந்தாகவும் பயன்படுத்தலாம்.

வல்லாரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் உடல் சூட்டை குறைக்கிறது.

வல்லாரை கீரை கண் பார்வை மங்குதல், கண் எரிச்சல் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக விளங்குகிறது, மேலும் கண் நரம்புகளை பார்வை திறனை அதிகரிக்க செய்கிறது. 

உடலுக்கு குளிர்ச்சி தரும் வல்லாரையை உட்கொண்டால் பித்தம் குறைவதுடன், அல்சர், அசிடிட்டி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களுக்கும் வல்லாரை சிறந்த மருந்தாக விளங்குகிறது.

பலவிதமான தோல் நோய்களுக்கு மருந்தாக பயன்படும் வல்லாரை முகப்பருக்களை குணப்படுத்தும் மருந்தாக விளங்குகிறது. 

தொடர்ந்து வல்லாரை கீரையை உட்கொண்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், இதன் மூலம் நம் உடல்நலம், மனநலம் காத்து நம் ஆயுளையும் நீட்டிக்கிறது. 

வல்லாரை கீரையை கொண்டு கூட்டு, தோசை, சட்னி சமையல் குறிப்புகள்

வல்லாரை கீரை கூட்டு



வல்லாரை கீரை சட்னி 



வல்லாரை கீரை தோசை 


------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 14 December 2017

துளசி - மருத்துவ குணங்கள்



வைரஸ் காய்ச்சல் மூளை காய்ச்சலுக்கு அற்புதமான மருந்து இந்த துளசி,  துளசி இலைக்கு நரம்பு கோளாறு, மன இறுக்கம், ஞாபக சக்தி குறைவு, ஆஸ்துமா, இருமல் மற்றும்  தொண்டை நோய்களை குணமாக்குகிறது. 

தோல் சுருக்கம், பார்வை கோளாறுகள் நீங்கிட துளசி அற்புதமான மருந்து என்று சித்த மருத்துவம் கூறுகிறது. வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலை சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும். 

குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராமல் தடுக்க தினமும் துளசி இலைகளை தின்று வந்தால் போதும். அற்புதமான ஜீரண சக்தியும் புத்துணர்ச்சியும் துளசி இலைகளை சாப்பிடுவதன் மூலம் பெறலாம். 


துளசி இலையை காய்ச்சலுக்கு மருந்தாக பயன்படுத்தும் முறை:
பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகை நசுக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு அதை அரை டம்ளராகும் வரை கொதிக்க வைத்து ஆறிய பின் அந்த நீரை குடிக்கவும், பின்பு சிறிது எலுமிச்சை சாறை அருந்தினால் எந்த வகை காய்ச்சலாய் இருந்தாலும் அது சிறிது சிறிதாக குணமாகி விடும் என்கிறது சித்த மருத்துவம். மேலும், துளசி நீரை ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து பருகினால் 448 வகை நோய்கள் குணமாகும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. 

தோல் நோய்கள் நீங்கிட:
துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி, படை  சிரங்குகள் காணாமல் போய் விடும்.

பேன், பொடுகு நீங்க:
துளசி சாற்றுடன் எலுமிச்சசை சாறு கலந்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு தொல்லை நீங்கும்.

வாய் துர்நாற்றம் நீங்க:
வாய் துர்நாற்றத்தைப்  போக்கி, நமது உடலுக்கான சிறந்த கிருமிநாசினியாக துளசி விளங்குகிறது. துளசி இலையைப் போட்டு ஊறவைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால் சர்க்கரை நோய் நம்மை அண்டாது.

வியர்வை நாற்றம் நீங்க:
வியர்வை நாற்றத்தை  தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே  கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் உடல் துர்நாற்றம் நீங்கி உடல் மணக்கும்.

துளசி நீர்:
ஒரு சுத்தமான செம்பு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை போட்டு அந்த பாத்திரத்தை எட்டு மணி நேரம் மூடி வைக்கவும், பின்னர் அந்த துளசி நீரை வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரகங்களில் சேரும் நச்சுக்கழிவுகளை அகற்றி தூய்மையாக்குகிறது, இந்த துளசி பானத்தை தினமும் குடித்து வந்தால் நரம்புகள் அமைதியடைந்து மூளையில் இரத்த ஓட்டம் சீரடைகிறது, இதனால் மன அழுத்தமும் குறைகிறது.  இந்த துளசி நீரை ஒரு மண்டலம் அருந்தி வர ரத்தத்தில் உள்ள தேவையற்ற வேதி பொருட்கள், விஷ நீர்கள் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகிறது, இதனால் இரத்தம் சுத்தமாகிறது. 

Thursday 7 December 2017

(ஐந்து வகை அரிசி) சத்து மிகுந்த சிறு தானிய பொங்கல்

நாம் உண்ணும் உணவே நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரையையும் கொண்ட பீட்சா, பர்கர் மற்றும் மைதா பொருட்களை கொண்டு தயார் செய்யப்படும் பாஸ்ட்புட் உணவுகளை தவிர்த்து இயற்கை உணவான சிறு தானியங்கள் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தாலே பல நோய்கள் நம்மை விட்டு ஓடிப்போகும். நான்கு சிறு தானியங்களின் பயன்களையும் அந்த  சிறு தானியங்களை பயன்படுத்தி செய்யப்படும் ஒரு பொங்கல் வகையையும் இன்று   பார்க்கலாம்.

தினை:
கி.மு 6000லேயே சீனாவில் பயிரடப்பட்டு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. பழங்காலத்தில் முதலாவதாக பயிரிடப்பட்டு மனிதனால் உபயோகிக்கப்பட்ட தானிய வகை தினை. தினை மாவு அதிக சத்து கொண்ட உணவுகளில் ஒன்று. தினையில் உடலுக்குத் தேவையான புரத சத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. தினையில் புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், நார்ச்சத்துக்கள், மாவுச்சத்து மற்றும் வைட்டமின் ‘பி’, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து உள்ளது. தினை இதயத்தை பலப்படுத்தும். பசியை  உண்டாக்கும். 
   
குதிரைவாலி:
கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து கொண்டது குதிரைவாலி அரிசி, குதிரைவாலி அரிசி சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளது. இது சிறந்த ஆண்டி ஆக்சிடன்ட் ஆக வேலை செய்கிறது. 

வரகு:
சிறுதானியங்களில் மிக முக்கியமானது வரகு. வரகில் உள்ள நார்ச்சத்து, அரிசி, கோதுமையில் இருப்பதை விட அதிகம். வரகில் மாவுச்சத்து குறைந்த அளவில் இருப்பதால், இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது அதிக சத்துக்கள் நிறைந்ததாகவும் புரதச் சத்து மற்றும் தாது உப்புக்களை கொண்டதாகவும் இருக்கிறது. வரகு நார்சத்து மிகுந்தும், இரும்பு, கால்சியம் மற்றும் பி வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன. மேலும், விரைவில் செரிமானம் அடையும் தன்மை கொண்ட  உடலுக்குத் தேவையான சக்தியையும் கொடுக்கும். மேலும், இதில் உடல் எடையைக் குறைக்கக்கூடிய புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களை கொண்டுள்ளது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. வரகு, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. மூட்டுவலியைக் குறைக்கிறது. 

சாமை:
நெல் அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை. சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிக்கும் நார்சத்து இதில் அதிகமாக உள்ளது.  இதனை தினசரி உணவாக சாப்பிடும்போது நீரிழிவு நோயினை கட்டுப்படுத்தவும், வராமலும் தடுத்திட முடியும். மற்ற சிறு தானியங்களைக் காட்டிலும் சாமையில் இரும்பு சத்து அதிகம் உள்ளத்தால், இரத்தசோகை வருவதற்கான வாய்பினைக் குறைக்கிறது. இளம் பெண்களின் முக்கிய உணவாக சாமை அமைவது அவசியமான ஒன்று. உடலிலிருந்து கழிவுகள் சரியாக வெளியேறவில்லை என்றாலே அது பல  நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும். நோய்களுக்கெல்லாம் மூலகாரணமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை. வயிற்றுக் கோளாறுகளுக்கு சாமை நல்மருந்தாகவும் திகழ்கிறது. சாமை தாது சத்துக்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகிறது.


தேவையான பொருட்கள்:

திணை அரிசி - 2 ஸ்பூன் 
சாமை அரிசி - 2 ஸ்பூன் 
குதிரைவாலி அரிசி- 2 ஸ்பூன் 
வரகு அரிசி - 2 ஸ்பூன் 
பச்சரிசி - 2 ஸ்பூன் 
(சொல்லப்பட்ட அளவில் ஐந்து வகை அரிசிகளையும் சேர்த்து எடுத்தால் 1 டம்ளர் அளவு அரிசி வரும்)
பாசிபருப்பு - 3 ஸ்பூன் 
மிளகுத்தூள் - 2 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
பூண்டு - 10 பூண்டு பற்கள் 
முந்திரிபருப்பு - சிறிது 
நெய்  - 3 ஸ்பூன் 
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் நான்கு வகை சிறு தானிய அரிசிகளையும் பச்சரிசியோடு சேர்த்து தண்ணீரில் ஊற வைத்து அலசி கொள்ளவும், பின்பு சுத்தமான தண்ணீரில் (1 டம்ளருக்கு 4 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு) நான்கு வகை சிறு தானிய அரிசிகளையும் குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாசிபருப்பு தனியாக ஊற வைக்கவும்.   

            

குக்கர் அடி பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெய் விட்டு மிளகுதூள், சீரகம், பூண்டு பற்கள், முந்திரிபருப்பு  போட்டு காஸ் அடுப்பை சிம்மில் வைத்து வதக்கி கொள்ளவும். வதக்கிய பின் அரிசியை ஊற வைத்த (4 1/2 டம்ளர் தண்ணீரோடு) பாத்திரத்தில் ஊற்றவும், இதில் ஊற வைத்த பாசிபருப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும். ஏழு முதல் எட்டு விசில் வரை வேக விடவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து அரிசி நன்கு வெந்து தயாராகி இருக்கும் பொங்கலில் 1 ஸ்பூன் நெய் விட்டு கிளறி சூடாக பரிமாறவும்.

மிகவும் சத்து மிகுந்த சுவையான சிறு தானிய பொங்கல் இது. 
------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 1 December 2017

இஞ்சி மருத்துவ பயன்கள்



ஞ்சுதல் என்றால் நீரை உள்ளிழுத்தல். நீரை உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயர் தோன்றிற்று.  இஞ்சி அதன் மருத்துவக் குணத்திற்காக பண்டையகாலத்திலிருந்தே இந்தியா, சீனா, தூர கிழக்கு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

* இஞ்சி நுரையீரல் சம்பந்தப்பட்ட சளி, இருமல் வியாதிகளை குணப்படுத்துகிறது. 

* இஞ்சி இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால் பெரும்பாலான இதய நோய்கள் வராமல் நம்மை பாதுகாக்கிறது.

* பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதுடன் செரிமான கோளாறு, ருசியின்மை, பசியின்மை, வாந்தி, கிறுகிறுப்பு போன்றவைகள் குணமாக்கி உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்து விடுகிறது.

* இஞ்சியில் 1 முதல் 4% வரை வோலடைல் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் இஞ்சியின் மருத்துவக் குணத்திற்கும் வாசனை மற்றும் ருசிக்கும் மூலகாரணமாக உள்ளது. 

* ஜின்ஜிபெரேன், பிசா பொலின் என்று இரண்டு நறுமண பொருட்களும் ஜின்ஜரோல்ஸ்  என்ற காரமான பொருளும் இஞ்சியில் இருப்பதால் வாந்தி வரும் நிலையை தடுக்கிறது. 

* இஞ்சியை பயன்படுத்துவதால் மாதவிடாய்க் கோளாறுகள், மற்றும் ஆண்மை குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.




இஞ்சியை நோய்கள் போக்க பயன்படுத்த வேண்டிய முறைகள்

* சளியை விரட்டும் இஞ்சி: 
இஞ்சியைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை இறக்கி வடிகட்டி அதனுடன் தேவைக்கேற்ப பனங்கற்கண்டு சேர்த்து அளவோடு சாப்பிட்டு வந்தால் மார்பில் சேர்ந்திருக்கும் சளி, அஜீரணம் குணமாகும்.

* தலைவலி, தலைபாரம் போக்கும் இஞ்சி: 
முற்றிய இஞ்சியைத் தோல் நீக்கி அரைத்துப் பிழிந்து தெளிய வைத்து இறுத்து சமஅளவு பசும்பால் கலந்து, அக்கலவையுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வாரம் இருமுறை தலை முழுகி வர நீர்க் கோவை, நீர்பீனிசம், தலைவலி, கழுத்து நரம்புப் பிசிவு, தலைப்பாரம், அடுக்குத் தும்மல் நீங்கும்.

* பித்தம் நீங்கிட இஞ்சி காயகல்பம்: 
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோல் சீவிப்போட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம் எடுத்து ஒரு வாயகன்ற கண்ணாடி ஜாடியில் போட்டு சுத்தமான தேனும் 150 கிராம் விட்டு நான்கு நாள் கழித்துத் தினம் காலையில் வெறும் வயிற்றில் ஒரிரண்டு துண்டுகள் தொடர்ந்து 1 மண்டலம் சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாகி, பித்தம் சாந்தப்பட்டுவிடும். ஆயுள் பெருகும். முகப்பொலிவும் அழகும் உண்டாகும். மனதிடம், நெஞ்சு உரம் பெறும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்பமுறையே!


* செரிமான கோளாறுகள் நீங்கிட: 
நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 கிராம் இஞ்சிப்பவுடர் உட்கொள்ளவும் (அ) புத்தம் புதிதான இஞ்சித்துண்டு சிறிது எடுத்துக்கொண்டு அதன்மேல் பாறை உப்பு தூவிக்கொண்டு சாப்பாட்டுக்கு முன்பு உட்கொண்டு வர சீரண சக்தியை வலுப்படுத்தும். உணவு நன்றாக செரிமானம் ஆகிவிடும். சுக்கு பவுடர் உடன் திப்பிலி மற்றும் கருமிளகு சேர்த்து உட்கொண்டு வர ஜீரண மண்டல பாதை நன்றாக செயல் பட ஆரம்பிக்கும்.

* பித்தம் போக்கும் இஞ்சி கஷாயம்: 
இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், பித்த சம்பந்தப்பட்ட வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும். அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும். எரிகுன்மம் ஆஸ்துமா, இளைப்பு, மயக்கம், இருமல் வாய்வு குடைச்சல், வலிகள் நீங்கும் சந்தேகமில்லை.

* ஆஸ்துமா, இருமல் நீங்க:
இஞ்சி 15 கிராம், வெள்ளெருக்கன் பூ 5, மிளகு 10 இவைகளை நசுக்கி இரண்டு குவளை நீர்விட்டுக் காய்ச்சி ஒரு குவளையாக சுண்ட வைத்து வேளை ஒன்றுக்கு அரை குவளையாக குடித்துவர சுவாசகாசம், இரைப்பு, சுவாச இருமலுக்கும், சளி நுரையீரல் அடைத்து வெளியேறாமல் தொல்லை கொடுக்கும்போதும் இந்தக் கஷாயத்தை காலை மாலை நோய் தீரும் வரை கொடுக்கலாம். (இதில் பூ மூன்றும் மிளகு 10 மட்டும்தான்; எடைகணக்கல்ல)

* பிரயாண களைப்பு வராமல் தடுக்க:
சுக்குப்பவுடர் 1 கிராம் பிரயாணம் செய்வதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டும். 

* ஆண்மை குறைவு நீங்க: 
ஆண்களுக்கு கோழி அல்லது ஆட்டு இறைச்சி சூப்பில் அல்லது ஆப்பாயில் முட்டையில் சுக்குப்பொடி சேர்த்துக்கொள்ள ஆண்மைக்குறைவு, விந்து முந்துதல் பிரச்சனைகள் குணமாகும்.

* இஞ்சி முரப்பா: 
இஞ்சியைப் பக்குவம் செய்து சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தி தயாரிக்கபடுவது இஞ்சி முரப்பா. இது நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல் கோளாறு, கப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முரப்பா தின்பதற்கும் ருசியாக இருக்கும்.

* மாதவிடாய் கோளாறுகள் நீங்கிட: 
புதிய இஞ்சியை நசுக்கி தண்ணீரில் சேர்த்து ஒரு சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். சர்க்கரை இத்துடன் சேர்த்து சாப்பாட்டுக்குப் பின்பு தினசரி 3 வேளை அருந்தி வரவும். மாதவிடாய்வலி, ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்கள் குணமாகும்.
------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்