Thursday 23 November 2017

நோய்கள் விரட்டும் கடல் பாசி - சுருள் பாசி - ஸ்பைருலினா

யற்கை அன்னை நமக்கு அளித்திருக்கும் அற்புதமான கொடைகளில் ஒன்று தான் கடல்பாசி (அகார் அகார்),  500 மில்லிகிராம் கடற்பாசியில் ஒரு கிலோ காய்கறியில் உள்ள சத்துக்கள் அடங்கியுள்ளது.  அதிக புரதச்சத்தும், வைட்டமின்களும் கொண்ட கடற்பாசியில் அதிக மருத்துவ குணங்களும் உள்ளது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு உணவாக கடல்பாசி மாத்திரைகள் கொடுக்கபடுகின்றது.



பாக்கெட்டில் கிடைக்கும் கடற்பாசி தூளை எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து குடிக்கலாம், ரோஸ் மில்க், பாதாம் மில்க், ஜிகர்தண்டா போன்ற குளிர்பானங்களிலும் கலந்து குடிக்கலாம். இந்த கடற்பாசியை உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. புற்று நோய், நீரிழிவு நோய், காச நோய் போன்ற கொடிய நோய்கள் அண்ட விடாமல் தடுக்கிறது கடற்பாசி. 


சேமியா வடிவில் கிடைக்கும் கடற்பாசி (சைனா கிராஸ்) கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு வகை செய்முறை


ஸ்பைருலினா என்று அழைக்கப்படும் கடற்பாசி மாத்திரை வடிவில் கிடைக்கிறது. பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2 கிராம் அளவு கடற்பாசி மாத்திரை எடுத்து கொள்ளலாம். சிறு பிள்ளைகள் ஒரு நாளைக்கு அரை கிராம் அளவு கடற்பாசி மாத்திரை எடுத்து கொள்ளலாம். கடற்பாசியில் வைட்டமின் பி12  சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் பி12  இரத்த சோகையை நீக்கும். மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகள், மீன்களுக்கு தயாரிக்கப்படும் கால்நடை தீவனங்களில் கடற்பாசி கலக்கபடுகிறது, இதனால் மாடுகள் அதிகமாக பால் கொடுக்கின்றன, மீன்கள் வேகமாக வளர்கின்றன. கடற்பாசி இயற்கை உணவகங்களில் விற்பனையாகி வருகிறது.   

சுருள் பாசி - ஸ்பைருலினா மருத்துவ குணங்கள் விளக்கும் காணொளி காட்சி 

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்