Thursday 23 November 2017

நோய்கள் விரட்டும் கடல் பாசி - சுருள் பாசி - ஸ்பைருலினா

யற்கை அன்னை நமக்கு அளித்திருக்கும் அற்புதமான கொடைகளில் ஒன்று தான் கடல்பாசி (அகார் அகார்),  500 மில்லிகிராம் கடற்பாசியில் ஒரு கிலோ காய்கறியில் உள்ள சத்துக்கள் அடங்கியுள்ளது.  அதிக புரதச்சத்தும், வைட்டமின்களும் கொண்ட கடற்பாசியில் அதிக மருத்துவ குணங்களும் உள்ளது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு உணவாக கடல்பாசி மாத்திரைகள் கொடுக்கபடுகின்றது.



பாக்கெட்டில் கிடைக்கும் கடற்பாசி தூளை எலுமிச்சை பழச்சாறுடன் கலந்து குடிக்கலாம், ரோஸ் மில்க், பாதாம் மில்க், ஜிகர்தண்டா போன்ற குளிர்பானங்களிலும் கலந்து குடிக்கலாம். இந்த கடற்பாசியை உணவில் சேர்த்து கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. புற்று நோய், நீரிழிவு நோய், காச நோய் போன்ற கொடிய நோய்கள் அண்ட விடாமல் தடுக்கிறது கடற்பாசி. 


சேமியா வடிவில் கிடைக்கும் கடற்பாசி (சைனா கிராஸ்) கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்பு வகை செய்முறை


ஸ்பைருலினா என்று அழைக்கப்படும் கடற்பாசி மாத்திரை வடிவில் கிடைக்கிறது. பெரியவர்கள் ஒரு நாளைக்கு 2 கிராம் அளவு கடற்பாசி மாத்திரை எடுத்து கொள்ளலாம். சிறு பிள்ளைகள் ஒரு நாளைக்கு அரை கிராம் அளவு கடற்பாசி மாத்திரை எடுத்து கொள்ளலாம். கடற்பாசியில் வைட்டமின் பி12  சத்து அதிகமாக உள்ளது. வைட்டமின் பி12  இரத்த சோகையை நீக்கும். மனிதர்களுக்கு மட்டுமல்ல மாடுகள், மீன்களுக்கு தயாரிக்கப்படும் கால்நடை தீவனங்களில் கடற்பாசி கலக்கபடுகிறது, இதனால் மாடுகள் அதிகமாக பால் கொடுக்கின்றன, மீன்கள் வேகமாக வளர்கின்றன. கடற்பாசி இயற்கை உணவகங்களில் விற்பனையாகி வருகிறது.   

சுருள் பாசி - ஸ்பைருலினா மருத்துவ குணங்கள் விளக்கும் காணொளி காட்சி 

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 16 November 2017

பூண்டு மருத்துவ குணங்கள்



நாம் அன்றாடம் சமைக்கும் சமையலில் இடம்பெறும் பூண்டின் மருத்துவ குணங்களை இன்று நாம் தெரிந்து கொள்ளலாம். தினமும் உணவில் பூண்டு சேர்த்து வந்தால் இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் அண்டுவதில்லை.  வெங்காய குடும்ப வகையை சேர்ந்த, இயற்கையாக கிடைக்கும் இந்த பூண்டு, நமக்கு தரும் மருத்துவ பயன்கள் அளவிட முடியாதவை. பூண்டு அதிக அளவில் விளைவது சீனாவில் தான், பூண்டு உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்த இடத்தில இந்தியா உள்ளது. 

பூண்டில் உள்ள அலிசின் என்ற ஆன்டிஆக்சிடண்ட் சத்து, நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வாய்வு கோளாறு, அஜீரண கோளாறுகளை நீக்குவதில் பூண்டுக்கு இணையான வேறு மருந்தில்லை பூண்டை உணவில் தொடர்ந்து பயன்படுத்துபவர்களுக்கு இரத்த அழுத்த நோய் வருவதில்லை. தொண்டை கரகரப்பு, பல் வலி போன்றவை நீங்க பூண்டு மிக சிறந்த மருந்தாகும். நம் உடலில் உள்ள இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கெட்ட கொழுப்பை அகற்றி, சீரான இரத்த ஓட்டம் தந்து, மாரடைப்பில் இருந்து நம்மை காப்பதில் பூண்டு பெரும் பங்கு வகிக்கிறது. 

இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட பூண்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது, ஆனால் பூண்டு சாப்பிட்டால் வரும் வாசம் காரணமாக பலர் பூண்டை பச்சையாக சாப்பிடுவதில்லை. பூண்டை பச்சையாக சாப்பிட்டு விட்டு பின்பு சிறிது புதினா இலைகளை மென்று தின்றால் பூண்டு வாசம் போய் விடும். 

பூண்டு பால்:
காச நோயினால் அவதிபடுபவர்கள் ஒரு டம்ளர் பாலில், ஒரு முழுப்பூண்டின் உரித்த பற்கள், பத்து மிளகு, சிறிது மஞ்சள் தூள், இவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை  அடுப்பில் வைத்து ஒரு டம்ளராக வரும் வரை காய்ச்சி எடுத்து குடித்து வர சளி, இருமல் நீங்கும். நோய் குணமானவுடன் பூண்டு பால் குடிப்பதை நிறுத்தி விட வேண்டும். 

பூண்டின் மருத்துவ குணங்கள் விளக்கும் காணொளி காட்சி 

Thursday 9 November 2017

சக்கரை நோய் கட்டுக்குள் கொண்டு வர...

நீரிழிவு நோய் ஏன் வருகிறது:
நம் உடலில் பாயும் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சரியாக வைத்திருக்க உதவுவது இன்சுலின். நம் வயிற்றிலிருக்கும் கணையம் என்ற உறுப்பு தான் ரத்தத்தில் சக்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் இன்சுலினை சுரக்கிறது, இந்த கணையம் சரியாக செயல்படாமல் போவதால் இன்சுலின் சுரப்பு பாதிக்கபடுகிறது.  இன்சுலின் சரியாக சுரக்காமல் போனால்   ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாகி விடுகிறது. இப்படிப்பட்ட நிலையைத் தான் நீரிழிவு அல்லது டயாபடீஸ் என்று குறிப்பிடுகிறோம்.

ரத்தத்தில் இயல்பாக இருக்க வேண்டிய சக்கரையின் அளவும், நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு இருக்கும் சக்கரையின் அளவும் எடுத்துக்காட்டும் புகைப்படம்:


பாதிப்புகள்:


நீரிழிவு நோயினால் அதிகம் பாதிக்கபடுவது இரத்தக்குழாய்கள் தான். இரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதால் கண்கள், சிறுநீரகங்கள், இதயம், பாதங்கள் ஆகிய உறுப்புகள் அதிக அளவு  நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகின்றன. 

மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று சரியான ‘‘உணவுக் கட்டுப்பாடு’’ முறையை பின்பற்றுவதன் மூலமும், (ரத்தத்தில் உள்ள சக்கரையின் அளவை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இந்த உணவு கட்டுப்பாடு முறை மாறும்) நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலமும் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம். சக்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர சில எளிய உணவு பழக்கங்கள் - விளக்கும் காணொளி காட்சிகள்.


சக்கரை நோய் முழுமையாக குணமடைய 

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 2 November 2017

புற்று நோய் தடுக்கும் சோற்று கற்றாளை

புற்று நோய் தடுக்கும் சோற்று கற்றாளை புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...!! புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும், சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு.



இப்போது ஓரளவுக்கு மருத்துவ உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

 இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். 

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் . 

தேவையான பொருட்கள்: 

சோற்று கற்றாழை:  400 கிராம் 
சுத்தமான தேன்:  500 கிராம் 
whisky (or) brandy:  50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக) 

தயாரிப்பு முறை:

சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும். அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும். நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது. 

 மருந்தை உட்கொள்ளும் விதம்: 

இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. 

மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும். பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது. 

இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .          நன்றி - வாட்ஸ் ஆப்  நண்பர்கள் குழு

சோற்று கற்றாளை - மருத்துவ குணங்கள்



சோற்று கற்றாளை சாறு செய்முறை

------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்